June 19, 2021

 ஒற்றைத்தலைவலிக்கு நிரந்தரத்  தீர்வு.!!!


சூரியன் உதிக்கும்போது துவங்கி ஏறிக்கொண்டேபோய் சூரியன் மறையும்போது நீங்கும் தலைவலிக்கு சூர்யாவர்த்தம் என்று பெயர். இப்படி சூரியனோடு சம்பந்தமில்லாமல், சதா தலையின் ஒரு பக்கம் வலிக்கும் தலைவலிக்கு அர்த்தாவபேதம் என்று பெயர். இந்த இரண்டு வகை தலைவலிகளுக்கும் இது கைகண்ட மருந்தாகும்.

கீழா நெல்லி எனப்படும் கீழ்காய் நெல்லிச் செடியின் வேர்கள் ஐந்தை மாலை நேரத்தில் எடுத்து,அவற்றை இரவில் தண்ணீரில் ஊறப்போடவும். மறுநாள் காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் அந்த வேர்களை தண்ணீரில் இருந்து எடுத்து லேசாக நசுக்கவும். ஒரு வாணலியில் அறுபது மில்லி நல்லெண்ணெயை ஊற்றி காய்ச்சவும். எண்ணெய் சூடானதும் நசுக்கிய வேர்களை போடவும். சடசடவென வெடித்து எண்ணெய் பொங்கும். பொங்கிவழியுமானால் தீயை குறைக்கவும். நுரை அடங்கியதும் மறுபடியும் தீயின் அளவைக் கூட்டவும். இப்படி நுரையெல்லாம் அடங்கி எண்ணெய் புகையக் காய்ந்த நிலையில் அடுப்பிலிருந்து இறக்கவும். கைபொறுக்கும்
சூட்டுக்கு எண்ணெய் ஆறியவுடன். கைநிறைய எடுத்து தலைஉச்சியிலிட்டு அழுத்தித் தேய்க்கவும். பத்து நிமிடம் கழித்து வெந்நீரில் குளிக்கவும். சாம்பிராணி புகையில் தலைமுடியை உலர்த்த வாய்ப்பிருந்தால் நல்லது. நினைவில் வையுங்கள், இவையனைத்தும் சூரியன் உதிப்பதற்குள் முடிக்கப்படவேண்டும். பிறகு சுடச்சுட புளி இல்லாத ரசம்
சாதம் அரைவயிறு சாப்பிட வேண்டும். மறுநாளும் இதைப்போன்றே செய்யவேண்டும். 
அவ்வளவுதான் தலைவலி போயே போச்சு!

ஒரு அனுபவ மருத்துவரின் பதிவு இது.  
நன்றி அவருக்கு

November 8, 2011


சிக்கல்
சிக்கல் என்பது ஒரு இலக்கை அடைய கடினப்படுத்தும் தடைகள். விரும்பப்படாத அல்லது அசாதரண நிலை. தமிழில் சிக்கலை பிரச்சினை என்றும் குறிப்பிடுவர்.
சிக்கல்களை இரும் பெரும் வகைகளாக பிரிக்கலாம்:
நன்றாக வரையறை செய்யப்பட்ட சிக்கல்கள் (well defined problems)
நன்றாக வரையறை செய்யப்படா சிக்கல்கள் (ill defined problems)
எந்தளவுக்கு ஒரு சிக்கல் சரிவர வரையறை செய்யப்பட்டுள்ளது என்பது அந்த சிக்கல் முன்னர் தீர்க்கப்பட்டு ஒரு தரப்படுத்தப்பட்ட தீர்வு உள்ளதா என்பது பற்றியதாகும்.
மனித உரிமை
மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். இந்த உரிமைகள் "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக"[1] கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமைசுதந்திரம்கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்சட்டத்தின் முன் சமநிலைநகர்வுச் சுதந்திரம்பண்பாட்டு உரிமைஉணவுக்கான உரிமைகல்வி உரிமை என்பன முக்கியமானவை

December 14, 2010

நீ காதலாகி வா!

 
நிராகரிப்பின் வலி உணர
மறு பிறப்பில் பிறக்க வேண்டும்
நீ என் காதலாக!
.......